Saturday, October 28, 2017

தமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா

எப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்னோட 2 சென்ட்ஸ்.. தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்க வைக்க இப்பிடி ஒரு சர்ச்சையான தலைப்பை 'நீயா நானா' குழு வைத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 'அழகு' என அவர்கள் சுட்டுவது கூட நிறத்தை முன்வைத்தே என்று நினைக்கிறேன்.
...

கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.

பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).

பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)

ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780

No comments:

Post a Comment