Saturday, October 28, 2017

தென் திருவாங்கூர் -குறிப்புகள்

பழைய திருவாங்கூரில் மிசனரிகளுக்கும், திருவாங்கூர் அரசுக்கு ஆதரவளித்த திருவாங்கூர் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளுக்குமான உறவு சுவாரசியமானது. தீவிரமாக தமது மதத்தை பரவ செய்யும் முனைவில் மிசனரிகள் ஒரு பக்கம் இருக்க, அந்த மதம் மாறியவர்களை எப்படி தங்கள் அரசியல் லாபிக்காக உபயோகிக்கலாம் என பிரிட்டிஷார் முயன்றது இன்னொரு பக்க அரசியல்.
ஆர்எஸ்எஸ் அன்பர்கள் தான் இந்த கருத்தில், 'ஆங்கிலேயர்களையும், மிசனரிகளையும்' ஒரே முடிச்சு இட்டு தான் விவாதிப்பார்கள் என்றால், தீவிர கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் அதே கருத்தையே நம்பி வருகிறார்கள்.
சரி, இனி வரலாறு..
திருவாங்கூருக்கான முதல் மிசனரி றிங்கல்தோபே வந்த போது, அவருக்கான பல உதவிகளை செய்தது அன்றைய திருவாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளான மேஜர் மெக்கலேவும், கர்னல் மன்றோவும் தான். 1858/1859 ல் கிறிஸ்தவ சாணார்(நாடார்)களுக்கும், நாயர்களுக்குமான சமூக அந்தஸ்து போட்டி தீவிரமாக வெடிக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே அனுமதிக்கபடாத கிறிஸ்தவ சாணார்களுக்கு உதவ மிசனரிகள் முன்வருகின்றனர். சாணார் முதலானோர் தோள்சீலை(litrally, its wearing blouse) அணிவது பண்பாட்டு சீரழிவு என்று உயர்சாதியினர் குமுறி பஞ்சாயத்து திருவாங்கூர் அரசவைக்கு போகிறது, பிறகு இங்கிலாந்து வரைக்கும்.
திருவாங்கூர் மிசனரிகள் இங்கிருந்த பிரிட்டிஷ் ரெசிடென்டான ஜெனரல் குல்லனின் உதவியை கேட்கின்றனர். அவரோ மறுக்கிறார்.. எந்த நாட்டின் உள்கலாச்சாரத்திலும் நாங்கள் தலையிட மாட்டோமென இங்கிலாத்தில் இருந்து அறிக்கை வர கிறிஸ்தவ சாணார்கள் அந்த முயற்சியில் தோற்கிறார்கள்.
பிரிட்டிஷார் அதிகமாக மதநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறார்கள் என்று அவதானித்த மிசனரி ஜேம்ஸ் டாவ்சன் திருவாங்கூரில் பணிபுரியும் வாய்ப்பை மறுத்தது இன்னொரு பக்க வரலாறு..
.......................
வரலாற்றை ப்ளாக் & வைட்டா பார்க்காம ஆரோக்கியமா விவாதிச்சா தொடர்ந்து பேசலாம் மக்கா...

No comments:

Post a Comment