Saturday, October 28, 2017

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி
.................................................................
திருவாங்கூர் ஆர்க்கியாலஜிக்கல் சீரிஸ்-ல், ஒரு குறிப்பை தேடி துளாவிக்கொண்டிருந்தேன், திடிரென ஒரு வரி என்னை கொஞ்சம் தூக்கி போட்டது.
12 ஆம் நூற்றாண்டு, சரியாக மார்ச் 1173 ஸ்ரீ வீர் உதய மார்த்தாண்ட வர்மன் என்ற அரசன் வேணாட்டை (பிற்கால திருவாங்கூர், இன்றைய கன்னியாகுமரி) ஐ ஆண்டு வருகிறார். அந்த வேணாட்டின் அப்போதைய தலைநகராக இருந்த இடம் 'குழிக்கோடு'.
Some Early Sovereigns Of Travancore எழுதிய சுந்தரம் பிள்ளையும் 'குழிடைகூறு' என முன்வைக்கிறார். திருவாங்கூர் குறித்து இன்று எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தரவுகளாக கையாளும், 'திருவாங்கூர் ஸ்டேட் மானுவேல்' எழுதிய நாகம் ஐயா குழிடைகூறு தான் பிற்காலத்தில் குழிகோடாக திரிந்ததாக எழுதுகிறார்.
சரி அதற்க்கு இப்போ என்ன என்கிறீர்களா? குழிக்கோடு' என்னுடைய சொந்த மண்; என் தந்தைவழி பாட்டன், பூட்டன், ஓட்டன் வசித்த மண். சிரிக்கவா, அழவா, பெருமிதப்படவா, சலிப்படையவா என்ற உணர்வு.
என் அனுபவத்திலும், முன்னோர்களிடம் இருந்து கேட்ட செவிவழி கதைகளிலும் எங்கள் மண்ணில் ஆட்சியாளர்கள் இருந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு அம்மன் கோயில் தவிர, வேறு எந்த கட்டுமானங்களுமே இல்லாத விவசாய மண் அது.
வரலாறு இப்படி தான், யார் யாருக்கு எது எது தேவையோ, அப்போது அதை கையில் தூக்கி எடுத்து அரவணைத்துக்கொள்கிறார்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை போல. அது பக்கத்து வீட்டுக்காரனை பார்த்து முறைக்கும் போது தான், நமக்கு வேடிக்கை காத்திருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155986799712780

No comments:

Post a Comment