Saturday, October 28, 2017

குளச்சல் போர்

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் திருவாங்கூரை படையெடுக்கும் எண்ணத்துடன் டச்சு கப்பல் ஒன்று குளச்சல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஒற்றர்கள் வழி தகவலை அறிந்த திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா, தனது தளபதியை அழைத்து படை திரட்ட சொல்கிறார்.
திருவாங்கூர் படையில் இருந்த மீனவ வீரர்களும், உள்நாட்டின் களரி ஆசான்களும் குளச்சலில் அணி வகுக்கிறார்கள். உள்ளூரில் வளர்ந்த நீண்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு குளச்சல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. பனம் தடிகள், பீரங்கிகள் போல நிறுத்தப்பட்டுகின்றன.
குளச்சலை நெருங்கும் டச்சுப்படை, கடற்கரையில் இருப்பது பனை தடிகள் என அறியாமல் திகைத்து போய் கப்பலை நிறுத்தி நங்கூரம் இடுகிறார்கள். சூழ்நிலையை புரிந்துக்கொண்ட மீனவ அணி, கடலில் முங்கி போய், கப்பலில் ஓட்டை இடுகிறார்கள். கப்பலில் தண்ணீர் ஏறி கப்பல் சரிய, உள்ளூர் ஆசான்கள் படகில் வந்து டச்சு வீரர்களுடன் சண்டையிட்டு, வீழ்த்தி தளபதி டெலனாயை சிறை பிடிக்கிறார்கள்.. இந்த சண்டைக்கு தலைமை தாங்கிய XXXXXXX அரசரின் கைகளால் பட்டையம் பெறுகிறார்....
.......................
கேட்க்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது இல்லையா? சுயசாதி பெருமையை நிலைநிறுத்த, பொய்யும் புரட்டும் சேர்த்து இன்றைய வரலாறுகள் இப்பிடி தான் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறன.
உண்மையில் "குளச்சல் போர்" என்று ஒன்று கடலில் நடக்கவே இல்லை. டச்சு வீரர்கள் சாவகாசமாக இறங்கி அரண் அமைத்து போர் தொடுத்தார்கள். இன்று "முதல் சுதந்திர போர்" என #சிலர்# வருணிக்கும் இந்த போரில், ஐரோப்பிய வீரர்களும் திருவாங்கூர் படையில் இருந்தார்கள் என்பது ஒரு வேடிக்கையான வரலாறு.
.......
நான் சிறுவனாக இருந்த போது, இந்த கதையில் இன்னொரு கிளை கதையும் சொல்லப்பட்டு வந்தது. 'மார்த்தாண்டவர்மா மந்திரவாதிகளை வைத்து மந்திரம் செய்து, வண்டுகளை பறக்க செய்து, அது டச்சு படைகளை தாக்கி அவர்களை நிலை குலைய வைத்தது' என அந்த கதை நீளும்.. 
இந்த நவீன காலத்தில் மந்திரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அந்த கதை பகுதியை தறித்து விட்டு இன்று "ஆனந்தமாய்" குளச்சல் போர் குறித்து இன்னொரு கதையை பரப்பி வருகிறார்கள்.. பாவமாய் இருக்கிறது. 😁
2

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155953682537780
...............
குளச்சல் போர் - தொடரும் விவாதம்..
ஒன்றை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த சமூக, வரலாற்று பின்புலத்தில் நீங்கள் நின்று விவாதிக்கிறீர்களோ, அதே வரலாற்று சங்கிலியில் நானும் ஒரு கண்ணியே..
"திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் அனைத்தும் அரசாண்ட எங்கள் முன்னோர்களிடமிருந்து திருடப்பட்டது" என்பது உங்கள் பார்வை என்றால், "திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் எங்கள் முன்னோர்களின் மீது திணிக்கப்பட்ட கடும் வரிகள் மூலம் உருவானது" என்பது எனது பார்வை. இரண்டிற்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, குளச்சல் போர் நடந்ததாக கூறப்படும் காலட்டத்தில் திருவாங்கூர் அரசு ஆங்கிலேயே நாட்காட்டி முறைகளை பின்பற்றவே இல்லை. 'குளச்சல் போர் ஜூலை 31 1741 அன்று முடிந்தது' என இன்று நீங்கள் வைக்கும் தரவுகள் கூட, ஆங்கிலேய அரசு கடிதங்கள் வழி கிடைப்பவை ( கவனிக்க டச்சு அரசு கடிதங்கள் அல்ல.).
மீண்டும்......... இந்த வரலாற்றில் உங்களை போல நானும் ஒரு பகுதியே. 'பனம் தடி அடுக்கி, பீரங்கி பாவனை காட்டிய' வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு, அவர்கள் நம்மை எள்ளி நகையாடிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன்..
கலங்கி தான் தெளிய வேண்டுமென்றால், வாருங்கள் கலங்கி தெளிவோம். யாரையும் காயப்படுத்தாமல் உரையாடுவோம்.
3

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155959899032780

No comments:

Post a Comment