Thursday, September 10, 2009

ஊடகங்களுக்கு எதிராக இலங்கை அரசின் வன்முறை - கண்டன கூட்டம்


ஈழத்தில் தமிழரின் கடைசி சொட்டு ரத்தத்தை குடித்த பின்னும் அதனுடைய வெறி அடங்காமல் திறந்த வெளியில் சிறை கூடங்களை அமைத்து அப்பாவிகளை இன்றும் சிதைத்து வருகிறது பேரினவாத சிங்கள அரசு... போர் நின்று விட்டது என அறிவித்து சுமார் 5 மாதங்கள் ஆகியும், அதனுடைய பயங்கரவாத எல்லைகளை இன்னும் விரிவு படுத்தி கொண்டே இருக்கிறது.

பெருவாரியான ஊடங்கங்களுக்கு எந்த தகவலை அளிக்காமலும், பல ஊடகங்களை பணத்தின் பெயரால் வளைத்து போட்ட இலங்கை அரசு எதற்கும் அடிபணியாமல் உண்மைகளை வெளி படுத்திய பத்திரிக்கையாளர்களை "சட்டம்" என்ற கொடூர கைகள் மூலம் அடக்க முயல்கிறது. அந்த அடக்கு முறைகளுக்கு சமீபத்திய இரை 'சண்டே டைம்ஸ்' இன் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசநாயகம்.

அரசுக்கு எதிராக எழுத புலிகளிடம் பணம் பெற்றார் என பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டி, இலங்கை நீதி மன்றத்தின் கருப்பு ஆடுகள் அவருக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி உள்ளது.

நம் கண்முன்னே நடக்கும் இந்த அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வரு தமிழனின் கடமை. போரின் போது இறையாண்மை பேசிய மவுனிகள், தமிழர்களுக்கு ஆதரவான எழுது உரிமையை பறிக்கும் இந்த நிலையிலும் மவுனமாகவே கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து கொண்டு இருகிறார்கள். வரலாறு இவர்களுக்கு இன்றைய சூழ்நிலையின் விபரீதத்தை கற்று கொடுக்கும் என்று எண்ணி இவர்களை நிராகரிப்போம்.

பத்திரிகையாளர்களுக்கு எதிராக இலங்கை அரசின் அடக்கு முறைகளை கண்டித்து 'சேவ் தமிழ்' (Save Tamil) குழுமமானது மூத்த பத்திரிகையாளர்களை கொண்டு சென்னையில் கண்டன கூட்டத்தை நடத்த உள்ளது. உதிர்ந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் குரலை உயர்த்தி பிடிக்க உங்கள் வருகையை பணிவன்புடன் எதிர்பார்கிறோம்.

நாள்: 12-09-2009
நேரம்: காலை 10:30
இடம்: தெய்வ நாயகம் மேல் நிலை பள்ளி, வெங்கட் நாராயண ரோடு, தி நகர், சென்னை.



மேலும் தகவல்களுக்கு

9840090898, 9884468039